follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published on

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்ததன் பின்னர், நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை வழங்கினார்.

மேலும், ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை முடித்து, சம்பந்தப்பட்ட உண்மைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிஷாந்த விக்ரமசிங்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் பதவியிலிருந்த போது விமான கொள்முதல் நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...