follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1செம்மணி புதைகுழி - இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

Published on

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன.

இதுவரையிலான அகழ்வுப் பணிகளில், முழுமையான 33 மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், சில சந்தர்ப்பங்களில் பல்வேறு மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால், தற்போதுள்ள அடையாளங்கள் மூலம் சரியான எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினமாக இருக்கின்றதாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோரின் சார்பில் செயற்படுகின்ற சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

அகழ்வின்போது, மனித எச்சங்களுடன் கூடுதலாக, புத்தகப்பை, பொம்மை மற்றும் சிறுவர் பாதணியும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகளை ஒரே வழக்காக இணைக்கும் வாய்ப்பு குறித்து அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைச்சுற்றியும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...