follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

Published on

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார் (இனியபாரதி), இன்று (06) காலை திருக்கோவிலில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இக்கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சி. சந்திரகாந்தன்) வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றபோது கொழும்பில் இருந்து கடத்தப்பட்டு காணாமல் போனார். இந்த சம்பவம் தொடர்பாக தொடரும் விசாரணையின் கீழ், பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் அவரது காரியாலயத்தில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையான் வழங்கிய வாக்குமூலத்தில் வெளியான தகவல்களின்படி, குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று இனியபாரதியின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து, அம்பாறை நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.

2005–2009: காணாமல் போனோருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள்
திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கடந்த 2005 முதல் 2009 வரை பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்களில், இனியபாரதி மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...