மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர்.
மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த துயர சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.