follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பிள்ளையானுக்கு தகவல் தெரிந்துள்ளது - அமைச்சர் ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பிள்ளையானுக்கு தகவல் தெரிந்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

Published on

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முன்கூட்டியே தகவல் பெற்றிருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேற்கோளிட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் இருந்தபோதே, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான சில திட்டங்கள் மற்றும் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்துள்ளார் எனவும், அது தொடர்பான மூலாதாரங்களைக் கொண்டு விசாரணைகள் முடிவடைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

“இந்த தகவல் ஒரு புதிய விசாரணை பாதையை வெளிப்படுத்துகிறது. பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதிலும், தீவிரவாதத் தாக்குதல்களுக்கான திட்டங்களைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததைக் காட்டும் பல ஆதாரங்கள் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன,” என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...