இலங்கையின் அனைத்து சிரேஷ்ட மற்றும் இடைநிலைப் பாடசாலைகளுக்கும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என பிரதமர் இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இணைய வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“1000 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன், கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் ஒருங்கிணைக்கும் தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமர் கூறுகையில்;
“2026 இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்காக பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.”