follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP12026 இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி

2026 இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி

Published on

இலங்கையின் அனைத்து சிரேஷ்ட மற்றும் இடைநிலைப் பாடசாலைகளுக்கும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என பிரதமர் இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இணைய வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“1000 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன், கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் ஒருங்கிணைக்கும் தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரதமர் கூறுகையில்;

“2026 இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்காக பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...