follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் - பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் – பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில், மணிக்கு 50-60 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால், குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடற்கரைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகளில் 2.5 – 3.0 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளது.

இது கரையை அடையும் அலைகளின் நேரடி உயரம் அல்ல என்றும், எவ்வாறாயினும் இந்தப் பகுதிகளில் அலைகள் கரைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, கடலில் பயணம் செய்யும் மீனவர்கள், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எல்லோரும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...

SLIIT நிறுவனத்தை மகாபொல ஊடாக நிர்வகிக்கப்படும் நிறுவனமாக்க நடவடிக்கை எடுக்கவும் – கோப் குழு அறிவுறுத்தல்

மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும்,...