follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் - பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் – பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில், மணிக்கு 50-60 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால், குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடற்கரைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகளில் 2.5 – 3.0 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளது.

இது கரையை அடையும் அலைகளின் நேரடி உயரம் அல்ல என்றும், எவ்வாறாயினும் இந்தப் பகுதிகளில் அலைகள் கரைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, கடலில் பயணம் செய்யும் மீனவர்கள், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எல்லோரும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...