முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி ஒரு கோரிக்கை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (14) தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி, எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி நீதிமன்றத்தில் தங்களது சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளன