follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1ஜனவரி முதல் ஜூலை வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

ஜனவரி முதல் ஜூலை வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

Published on

இந்த ஆண்டு கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 13ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்;

“.. இந்த 68 சம்பவங்களில், 50 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நேரடியாக தொடர்புடையவையாகும். மீதமுள்ள 18 சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களால் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுகளில், 37 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவர். 39 பேர் காயமடைந்துள்ளனர், அதில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சம்பந்தம் கொண்டவர்கள்..” எனத் தெரிவித்தார்.

இது குறித்த விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு மற்றும் நுணுக்க புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுர்வேத துறையில் 304 மருத்துவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா மருத்துவமனையை,...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...