follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1மஹியங்கனை அருகே விபத்து - கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மஹியங்கனை அருகே விபத்து – கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

Published on

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை 17 ஆவது மைல் தூணுக்கருகே அமைந்த வியானா கால்வாயில், மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

விபத்துத் தகவலைத் தொடர்ந்து, மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டியில் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் இருவரும் உயிரிழந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மேலும் விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தபால் அலுவலகம்

சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு சக்தியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கை...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு ஒன்லைன் கடவுச்சீட்டு

வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையர்கள்...

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan...