follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP169 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தபால் அலுவலகம்

69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தபால் அலுவலகம்

Published on

சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு சக்தியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கை வகுத்துள்ள இலங்கை தபால் துறையின் பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம், ஜூலை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

அதன்படி, பொலன்னறுவை தபால் தலைமையfத்தின் புதிய கட்டடத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து வைக்க உள்ளார்.

“பிபிதெமு பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் பொலன்னறுவை தபாலக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள், புதிதாக கட்டப்பட்ட தபால் நிலையக் கட்டடத்திற்குப் பின்னால் அமைந்துள்ள நிர்வாக வளாகம் மட்டுமே நிறைவடைந்திருந்தது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில், முன்புறத்தில் இருந்த பழைய பாழடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு, இந்தக் கட்டடம் புதிய பொலன்னறுவை தபால் நிலையத்திற்காக கட்டடத் திணைக்களத்தினால் ரூ. 69 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பிராந்தியத்தில் உள்ள அஞ்சல் சேவையானது, 12 தபால் நிலையங்களையும் 91 துணை தபால் நிலையங்களையும் கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் – செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து பாராளுமன்ற...

அமெரிக்கா தீர்வை வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா...

06 மாத காலப்பகுதியில் 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...