follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மஹியங்கனை அருகே விபத்து - கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மஹியங்கனை அருகே விபத்து – கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

Published on

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை 17 ஆவது மைல் தூணுக்கருகே அமைந்த வியானா கால்வாயில், மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

விபத்துத் தகவலைத் தொடர்ந்து, மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டியில் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் இருவரும் உயிரிழந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மேலும் விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...