follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய வளர்ச்சி

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்றைய (14) வர்த்தக நாளை முடிவில் 18,838.39 புள்ளிகளாக இருந்த ASPI, இன்றைய (15) வர்த்தக தின தொடக்கத்திலேயே 19,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்த வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சந்தையின் புள்ளிவிவர ரீதியான நிலைமையும் வலுவடைந்துள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.

இன்றைய வர்த்தக நாளில் இதுவரை பதிவான மொத்த வர்த்தகப் புரள்வு ரூ.1.29 பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய காலங்களில் அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் மற்றும் நிதி மீளுருவாக்கச் செயற்பாடுகள் பங்குச் சந்தை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...