follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1NPP வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

NPP வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

Published on

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 4.40 மணியளவில் அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, துப்பாக்கிச் சூட்டினை நடத்தி பின்னர் தப்பிச் சென்றனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டின் முன் கதவை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...

மின்சாரம் சட்டமூலம் – குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள் சில தொடர்பில் இணக்கம்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷனை...