follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' அழகு கலை நிலையம் திறப்பு

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ அழகு கலை நிலையம் திறப்பு

Published on

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியின் கீழ், ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, தலைமையினை வகித்தார்.

இதற்கு முன்னர், இந்த அழகு நிலையம் பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்பெறும் வகையில் செயல்பட்டிருந்தது. ஆனால் தற்போது,

பெண் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சலுகை விலையில் இந்த சேவையைப் பெற முடியும்.

மேலும், பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பெண்களுக்கு இங்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவதே இந்த திட்டத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

இந்த அழகு நிலையம், பொலிஸ் சேவை பெண்கள் பிரிவு பதில் தலைவர் நில்மினி சமரதுங்க, சந்தீபா செவ்மினி, மற்றும் பொலிஸ் களப் படை தலைமையக கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி ஆகியோரின் ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அழகு நிலையம், பொலிஸ் சமூகத்தில் பெண்களின் உடலியல் மற்றும் மனநல வளர்ச்சிக்கு உதவியாகவும், துறையின் சமூக தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...