சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் இன்று (17) பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
பல நாட்களாக பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டு இன்று (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.