follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP220 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

Published on

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ், 20 ஆண்டுகளாக இருந்த கோமா நிலையில் இருந்து மீளாமல், தனது 36-வது வயதில் உயிரிழந்தார்.

2005ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் ஏற்பட்ட கார்விபத்தில் மூளையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவர் கோமா நிலையில் சென்றார். அதன்பின்னர் சவூதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் கடந்த இருபது ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தார்.

இளவரசரின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் தனது மகனின் மறைவை உறுதிப்படுத்தி, “அல்லாஹ்வின் விதியும் ஆணையும் என்பதை நம்பிக்கையுடன் ஏற்று, ஆழ்ந்த துக்கத்துடன் என் அன்பு மகனின் உயிரிழப்பை அறிவிக்கிறேன். அல்லாஹ் அவருக்கு பரிசுத்தமான இரக்கம் அளிக்கட்டும்” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இளவரசரின் மறைவு, சவூதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...