follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தை மீறியதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகிய மூவரும் குற்றவாளிகளாக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

எனினும், மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அடுத்த நீதிமன்ற தினத்தில் அவர்களை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...