follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து தொடர்பாக ஜெனீவாவில் முறைப்பாடு

முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து தொடர்பாக ஜெனீவாவில் முறைப்பாடு

Published on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை அரசாங்கம் இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் கடும் நடவடிக்கைக்கு தயாராகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

இது தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் (Inter-Parliamentary Union – IPU) முறைப்பாடு பதிவு செய்யப்படும் என சங்கத்தின் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்;

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் முடிவை அமைச்சரவை ஏற்கனவே எடுத்துள்ளது. இது மிக மோசமான, நியாயமற்ற தீர்மானமாகும். பல வயதான முன்னாள் எம்.பிக்கள், மருந்துகளுக்காகவே அந்த ஓய்வூதியத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.”

“ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கே ஓய்வூதியத்தில் நிம்மதி கிடைக்காத சூழ்நிலையில், அதை முழுமையாக நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அரசு மீளாய்வு செய்ய வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசாங்கம் தங்களது முடிவை திரும்பப் பெறுமா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...