follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எரிபொருள் விலையில் பெரிய சலுகை? ரூ.50 வரியை அரசாங்கம் நீக்க நடவடிக்கையாம்

எரிபொருள் விலையில் பெரிய சலுகை? ரூ.50 வரியை அரசாங்கம் நீக்க நடவடிக்கையாம்

Published on

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருள் ஒன்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கத்தின் காலத்தில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூ.884 பில்லியன் பெறுமதியான கடனை அரசுத் திறைசேரிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அந்தக் கடனைச் சீர்செய்யும் நோக்கில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூ.50 வரி விதிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்தக் கடனின் அரைபங்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் தீர்வு காணப்பட்டதும், அந்த வரியை நீக்கும் வாய்ப்பை அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...