follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கல்வி சீர்திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தல்

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தல்

Published on

கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும் பணியில், முந்தைய அரசாங்க காலத்தில் நிபுணர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ரோஹிணி கவிரத்ன கருத்து தெரிவிக்கையில், “முன்னதாக அரசால் நிபுணர்கள் வாயிலாக தயாரிக்கப்பட்ட கல்வி சீர்திருத்த முன்மொழிவுகள் இருந்தன. தற்போது புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போதும், அவற்றை மீண்டும் பரிசீலித்து, பூரணமாகவோ, மாற்றங்களுடனோ பயன்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

மேலும், கல்வி சீர்திருத்தங்கள் வெள்ளை அறிக்கை (White Paper) வடிவில் வெளியிடப்பட வேண்டும் என்றும், இதன்மூலம் அது பொது விவாதத்திற்குத் திறந்ததாகும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, கல்வி அமைச்சர் மற்றும் பிரதமரான ஹரிணி அமரசூரிய, புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு பாடத்தின் நேரம் 45 நிமிடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆசிரியர்களுக்குப் போதுமான கற்பித்தல் நேரத்தை வழங்கும் எனவும் அவர் விளக்கினார்.

ஆரம்பத்தில் பாடசாலை நேரத்தை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நீட்டிக்க முன்மொழியப்பட்டதாக அவர் குறிப்பிட்டபோதும், இறுதியில் அரை மணி நேரம் மட்டுமே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் மாணவர்கள் கல்விச் செயல்பாடுகளில் விரைவில்லாமல் ஈடுபட வாய்ப்பு ஏற்படுமெனவும், புதிய மாற்றங்கள் கல்வித் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...