follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுஇந்தியா செல்லாது பாகிஸ்தான் - பாதுகாப்பு காரணம் என அறிவிப்பு

இந்தியா செல்லாது பாகிஸ்தான் – பாதுகாப்பு காரணம் என அறிவிப்பு

Published on

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஹொக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் ஹொக்கி அணியை அனுப்ப முடியாது என்று அந்த நாட்டின் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஹொக்கி சம்மேளனம் சர்வதேச ஹொக்கி சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளது.

இந்த போட்டிகள், உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதி வாய்ப்பை அளிப்பதால் மிகவும் முக்கியமானவை எனக் கருதப்படுகின்றன. இருப்பினும், பாகிஸ்தானிய வீரர்கள் இந்தியாவிற்குப் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஹொக்கியில் பெரும் பெயருடனும், பன்முறை சாம்பியனாகவும் விளங்கிய பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15வது இடத்தில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...