follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து

Published on

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று(25) பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இந்தத் தகவலை வழங்கினார்.

அவரது விளக்கத்தில்;

2024–2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை புதுப்பிக்க தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) 2,039 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

இதில் 1,820 மருந்தகங்களுக்கே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 219 மருந்தகங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

உரிமம் இரத்து செய்யப்பட்ட முக்கிய காரணங்கள்:

137 மருந்தகங்களுக்கு நிரந்தர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக, அவர்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

82 மருந்தகங்களின் உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள், சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியதால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“மருந்தகங்கள் பொதுமக்களின் நலனுக்காக இயங்குகின்றன. எனவே, தர நிர்ணயங்களையும், தொழில்முறை வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்காமல் இயங்கும் மருந்தகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது” எனக் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...