follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் தற்கொலை

கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் தற்கொலை

Published on

கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய இரு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய நபர், காவல்நிலைய சிறைக்கூடத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தின்போது கடமையில் இருந்த உப காவல்துறை பரிசோதகரும், காவல்துறை கான்ஸ்டபிளும் விசாரணை முடிவுக்கு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...