follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

Published on

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பொலிஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய சிசிடிவி காணொளியை மையமாகக் கொண்டு, கடந்த ஜூலை 25ஆம் திகதி, பெலவத்தை பன்னிப்பிட்டிய வீதியில் அமைந்த உணவகமொன்றுக்கு நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்ற சம்பவம் தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவக ஊழியர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் தங்க நகை திருட்டு குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உணவகத்தின் முன் நடைபாதையில் சிலர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகவும், இது தொடர்பாக உணவக உரிமையாளரிடம் கேள்வி எழுப்பும் சிசிடிவி காட்சிகள் தவறாக விளக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச அதிகாரிகள் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக உண்மையான தகவல்கள் உள்ளபட்சத்தில், அதற்கான முறைப்பாடுகள் பதிவு செய்யலாம் எனவும், எந்தவொரு அதிகாரியின் பதவியையும் பொருட்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...