follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1கண்டி நகருக்கு செல்லும் மக்களுக்கான விஷேட அறிவிப்பு

கண்டி நகருக்கு செல்லும் மக்களுக்கான விஷேட அறிவிப்பு

Published on

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

மேலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட மலர் விற்பனைக் கடைகள் அமைந்துள்ள இடங்களைப் பற்றியும் தன்னுடைய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி நகருக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “கண்டி நகரில் மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் நிலத்தடி சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி வீதியை கடக்கின்றனர். இந்த பாதைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணமாக, பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனை கடைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாக வீதியை கடப்பது அவசியமானதே, அதே நேரத்தில் மலர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காமல் தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...