வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் 33 வயதுடையவராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலை, அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தாரக நாணயக்காரவின் வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.