follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் - முழு இலங்கைக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் – முழு இலங்கைக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு

Published on

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகாமையில், வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை 12:11 மணிக்கு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் கடலின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின்னர் பல பின்னதிர்வுகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை உயிரிழப்புகள் அல்லது உடைமைகள் சேதமடைந்ததற்கான தகவல்கள் எந்தவொரு அதிகாரபூர்வ அமைப்புகளாலும் வெளியிடப்படவில்லை.

இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையில் அதனுடைய தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பின்னதிர்வுகள் ஏற்பட்டிருந்தாலும், தேவையற்ற பதற்றத்திற்கு இடமின்றி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் தீபானி வீரகோன் கேட்டுக்கொண்டார்.

தற்போது வரை எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...