follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்இந்தியாவில் பேரூந்து மற்றும் லொறி விபத்து – 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் பேரூந்து மற்றும் லொறி விபத்து – 18 பேர் உயிரிழப்பு

Published on

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த கோரமான விபத்தில் 18 கன்வார் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோகன்பூர் காவல் பிரிவின் எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே, ஏராளமான யாத்ரீகர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து, எதிரே வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் தாக்கம் இவ்வளவு மோசமாக இருந்ததால், 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளதாகவும், தூக்க கலக்கத்தால் வாகனம் ஓட்டும் நேரத்தில் சிறிதளவாவது கவனச்சிதறல் ஏற்பட்டால் இதுபோன்ற பெரும் விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதற்கான துயரமான எடுத்துக்காட்டு இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலைப் பயணத்தை தவிர்க்கும் பொறுப்புணர்வும் அவசியமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...