ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, 600,768 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ. 3,003,840,000 தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முதியோர் பயனாளிகள், நாளை (31) முதல் தங்களின் அஸ்வெசும பயனாளர் வங்கிக் கணக்குகள் மூலம் இந்த நிதியை பெற முடியும்.