follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉலகம்குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு : இந்திய வம்சாவளி விமானி அமெரிக்காவில் கைது

குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு : இந்திய வம்சாவளி விமானி அமெரிக்காவில் கைது

Published on

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருஸ்டம் பகவாகர் எனும் பெயருடைய இந்த விமானி, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவர் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், விமானி அறையில் இருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த டெல்டா ஏர்லைன்ஸ் போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு, சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய சில நிமிடங்களில் இந்த கைது நடைபெற்றது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

அதிகரிக்கும் பேரழிவு அபாயம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று(30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள...

சுனாமி அலைகள் ஜப்பானில் தாக்கம் 9 இலட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில்...