follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

Published on

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, ரூ. 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் விதித்து நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அண்மையில், நகரவெவ பறவைகள் பூங்காவிலிருந்து 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ. 1.5 மில்லியன் மதிப்புடையதாக இருப்பதுடன், இவை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...