கட்டாய காணாமல் போனோர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இலங்கை

875

இலங்கையில் பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக காணாமல் போனதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளைத் தொடர வேண்டாம் என்று இலங்கை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆசியபசிபிக் இயக்குனர் யாமினி மிஸ்ரா, பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போன நிலையில், உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் ஆக்கங்களில் இலங்கை உள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here