follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுஇன்னும் இரண்டு வாரங்களில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்ட வரையறை

இன்னும் இரண்டு வாரங்களில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்ட வரையறை

Published on

சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத் துறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தல், கட்டுப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசேட அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும், இதனை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புவ்கெல்ல தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று இதற்கு முன்னர் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

எனினும், சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களும், பொய்யான பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், இவற்றை சட்டவரையறைகளுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ரட்ட அனுரட்ட அல்ல, ரட்ட ஐஎம்எப் இற்கு’ – சஜித்

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடியது

தேர்தல் ஆணையம் இன்று (18) காலை கூடியது. நேற்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்)...

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ KRISH பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட...