follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகொவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் வழங்கி வைப்பு (படங்கள்)

கொவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் வழங்கி வைப்பு (படங்கள்)

Published on

இரத்தத்தில் உள்ள ஒக்சீசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் வசதிக்காக பகிர்ந்தளிப்பதற்காக இந்த துடிப்பு ஒக்சிமீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொற்று நிலைமைக்கு மத்தியில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாக களனி மாதெல்வத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரர் இதன்போது தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பையும் பாராட்டினார்.

May be an image of 1 person, sitting, standing and indoor

No photo description available.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...