follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகொவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் வழங்கி வைப்பு (படங்கள்)

கொவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் வழங்கி வைப்பு (படங்கள்)

Published on

இரத்தத்தில் உள்ள ஒக்சீசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் வசதிக்காக பகிர்ந்தளிப்பதற்காக இந்த துடிப்பு ஒக்சிமீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொற்று நிலைமைக்கு மத்தியில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாக களனி மாதெல்வத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரர் இதன்போது தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பையும் பாராட்டினார்.

May be an image of 1 person, sitting, standing and indoor

No photo description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....