follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுஓய்வு பெறும் தீர்மானம் குறித்து கலந்துரையாடல்

ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து கலந்துரையாடல்

Published on

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் பானுக ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 03 ஆம் திகதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பானுக ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், லசித் மாலிங்க உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந் நிலையிலேயே இன்று விளையாட்டுத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் பானுக ராஜபக்ஷ தனது முடிவினை மீள்பரிசீலனை செய்ய சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...