லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் தெசார ஜயசிங்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய தலைவர் இன்று நியமிக்கப்பட்டார்.
ரேணுக பெரேரா ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.