நெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

592

நெலுவ பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (09) தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு நெலுவ நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நெலுவ வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இஹல கமகே அஜித் தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டை மூன்று நாட்களுக்கு முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here