follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1டொங்காவை தாக்கிய சுனாமி!

டொங்காவை தாக்கிய சுனாமி!

Published on

பசுபிக் நாடான டொங்கா இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்தது.

இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்சைகள் மற்றும் வெளியேற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன், பல தென் பசுபிக் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலையில் சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டது மற்றும் தெற்கில் உள்ள அமாமி தீவுகளில் மூன்று மீட்டர் (9.84 அடி) உயர அலைகள் தாக்கக்கூடும் என்று கூறியது. முன்னதாக அங்கு ஒரு மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கின.

எனினும் இதனால் காயம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஜப்பானின் பொது ஒலிபரப்பான NHK தெரிவித்தது.

சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை மக்கள் கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜப்பான் அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் டொங்காவின் தலைநகரமும் கடுமையான சுனாமி அலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுத்தது. கடலோர சாலைகளில் அலைகள் பாய்ந்து, சொத்துக்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

தேசபந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...