follow the truth

follow the truth

March, 27, 2025
Homeஉள்நாடுஆசிரியர்கள், அதிபர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம்

ஆசிரியர்கள், அதிபர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம்

Published on

அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் கல்விசார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு வீட்டிலிருந்து கடமையாற்றும் காலத்தில் ஒன்லைன் முறை அல்லது பிற மாற்று முறைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நேற்று முன்தினம் (07) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தங்கள் சம்பளப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என குறித்த சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...

நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம்...

சாமர சம்பத்துக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில்...