follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉள்நாடுகெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

கெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Published on

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலயத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.

அதன்படி, உயர் நீதிமன்றத்தில் இன்றும் , நாளையும், வெள்ளிக்கிழமையும் மனுக்கள் மீதான பரிசீலனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற பரிசீலனையின் போது நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய இல்லாத காரணத்தினால், விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்ற அமர்வு தீர்மானித்தது.

எல்லே குணவன்ச தேரர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம்...

அஜித் நிவாட் கப்ராளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...

அனுர யாப்பாவுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும்...