follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்உக்ரைனிலுள்ள தூதரக பணியாளர்களின் உறவினர்களை வௌியேறுமாறு அமெரிக்கா உத்தரவு

உக்ரைனிலுள்ள தூதரக பணியாளர்களின் உறவினர்களை வௌியேறுமாறு அமெரிக்கா உத்தரவு

Published on

பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உக்ரைனிலுள்ள தூதரகப் பணியாளர்களின் உறவினர்களை அங்கிருந்து வௌியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அங்குள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வௌியேறுவதற்கான அனுமதியையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கியுள்ளது.

உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அங்கிருந்து வௌியேறுவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அந்த திணைக்களத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தற்போதைய பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனுக்கோ, ரஷ்யாவுக்கோ செல்ல வேண்டாம் எனவும் அங்கு செல்லுமிடத்து துன்புறுத்தல்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...