follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுகட்டார் செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகள்

கட்டார் செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகள்

Published on

கட்டாருக்கு இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வீட்டுப்பணிப்பெண்கள் பணிகளுக்கு அமர்த்தப்படும்போது அவர்களுக்கான ஆகக்கூடிய வருடாந்தக் கொடுப்பனவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு செலவுகளில் நியாயமற்ற அதிகரிப்புக்கு எதிரான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக அதிகபட்ச கொடுப்பனவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர் சந்தையைக் கட்டுப்படுத்தமுடியும் என்று கட்டாரின் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இதன்படி இலங்கையர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், இந்தோனேசியர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 15ஆயிரம் ரியாலுக்கும், பங்களாதேஸியர்கள் 14ஆயிரம் ரியாலுக்கும், இந்தியர்கள் மற்றும் கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் பணியாளர்கள் 9ஆயிரம் ரியாலுக்கும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அதிகாரபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதிக்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்தத் தீர்மானத்தை, அனைத்து தகுதிவாய்ந்த அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...