follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுநாட்டில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Published on

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இது 100 வீதமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக நாட்டில் பதிவாகும் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தால், கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கலாம் என்று அறிக்கைகள் வெளிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எனவே இதுவரை கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி பெறாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...