follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்9 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள்

9 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள்

Published on

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இதுவரை உலக அளவில் 36.63 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56.55 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 390, 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 7,458, 8513 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மேலும் 2,251 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 01 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 45, 569, 419 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 28, 117, 392 பேர் வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பொதுமக்களிடம் போதுமான ஆதரவு இல்லை. ஒட்டுமொத்தமாக அமெரிக்க தடுப்பூசி இயக்கம் மந்தமாக உள்ளது. தடுப்பூசி போடத்தொடங்கி 13 மாதங்களுக்கு மேலாகியும் அமெரிக்கர்களில் 63 சதவீதத்தினர் மட்டுமே (21 கோடி பேர்) முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...