மட்டக்களப்பில் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1,300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்தார்.