follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஅனுரவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை - பிரசன்ன ரணதுங்க

அனுரவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை – பிரசன்ன ரணதுங்க

Published on

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள அவர், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கலகெடிஹேனவில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நான் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரமன்றி எங்கும் அரசியல் கூட்டத்தை நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை அங்கீகரித்து மதிக்கும் நபர் என்ற வகையில், இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடாத்தி, இதற்குக் காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க நான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளேன் என்பதை வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...