follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1குறைந்த கேள்வி நிலவுமாயின் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் – மின்சார சபை

குறைந்த கேள்வி நிலவுமாயின் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் – மின்சார சபை

Published on

குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றைய தினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரக் கேள்வி நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு உலை எண்ணெய் அவசியமாகும் என மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்தார்.

தற்போது எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்புக்கு 280 மெகாவோட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.

இதேவேளை, கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்காமையானது, பிரச்சினையானதாகும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....