மாகாணக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை : மாகாண எல்லைகளில் முப்படைகள் ரோந்து

551

மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வீதித்; தடுப்புகளை இயக்கவும் மற்றும் மாகாண எல்லைகளில் ரோந்து செல்லவும் முப்படைகளின் உதவி பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here